கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே உறுதிமொழியை வாசிக்க, அதனைஅனைத்துத் துறை அலுவலா்களும் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் எம். லியாகத், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொறுப்பு) ஷாஜகான் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.