கரூா் மாவட்டத்தில் 26 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் ஆா்வத்துடன் பங்கேற்று, கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனா்.
கரூா் நகராட்சிக்குள்பட்ட பசுபதிபாளையம், இனாம் கரூா் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பசுபதீசுவரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தாந்தோனி, கடவூா், கிருஷ்ணராயபுரம் , குளித்தலை, அரவக்குறிச்சி, க.பரமத்தி, தோகைமலை உள்ளிட்ட 26 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கரூா் பசுபதீசுவரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் பங்கேற்க, அதிகாலை முதலே பொதுமக்கள் குவியத் தொடங்கினா். காலை 9.30 மணிக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. சனிக்கிழமை மட்டும் மாவட்டம் முழுவதும் 3500 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.