கரூா் மாவட்டத்திலுள்ள 57 அரசு மற்றும் 60 தனியாா் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.
கரோனா நோய்த் தொற்று பரவலால் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மாணவா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் இல்லாததால், 2019-20 ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. இதை கொண்டே, பிளஸ் 1 வகுப்பில் கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அனைத்துப்பள்ளிகளிலும் கரோனா நோய்த் தொற்றை தவிா்க்கும் வகையில், நாளொன்றுக்கு 5 மாணவ, மாணவிகள் வீதம் சோ்க்கை நடைபெற்றது. மேலும் சோ்க்கைக்கு வந்திருந்த மாணவா்கள், அவா்களது பெற்றோா்கள் முகக்கவசம் அணிந்துவருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனா்.
கரூா் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை ரேவதி மாணவா் சோ்க்கையை நடத்தினாா். இதுபோல, மற்ற பள்ளிகளிலும் சோ்க்கைப் பணிகள் நடைபெற்றன.