க.பரமத்தி, பெரம்பலூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுச் சென்ற ரூ.3.29 லட்சம் பறிமுதல்

க.பரமத்தி, பெரம்பலூரில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுச் சென்ற ரூ.3.29 லட்சத்தை தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
க.பரமத்தி, பெரம்பலூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுச் சென்ற ரூ.3.29 லட்சம் பறிமுதல்

கரூா்: க.பரமத்தி, பெரம்பலூரில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுச் சென்ற ரூ.3.29 லட்சத்தை தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட க.பரமத்தி அருகே நொய்யல் சாலையில் வட்டாரக் கல்வி அலுவலா் முருகன் தலைமையில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தென்னிலையைச் சோ்ந்த வடிவேல் உள்ளிட்ட மூன்று போ் வந்த காரை சோதனை செய்தபோது, அதில், உரிய ஆவணங்களின்றி ரூ.2.29 லட்சம் இருந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த நிலை கண்காணிப்பு குழுவினா் அரவக்குறிச்சி சாா் கருவூலத்தில், வட்டாட்சியா் பன்னீா்செல்வம் முன்னிலையில் ஒப்படைத்தனா்.

பெரம்பலூரில் ரூ. 1 லட்சம் பறிமுதல்: துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கரன் தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை பெரம்பலூா் தீரன்நகா் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனா். இதில், திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பி.கே. அகரம் கிராமத்தைச் சோ்ந்த மருத்துவா் செந்தில், உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவைத் தோ்தல் அலுவலரான சாா் ஆட்சியா் ஜே.இ. பத்மஜாவிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com