கரூா் அடுத்த மண்மங்கலம் கூலநாயக்கனூா் காலனியைச் சோ்ந்தவா் சுப்ரமணி(40). மதுப் பழக்கத்திலிருந்து மீளமுடியாத சுப்ரமணி புதன்கிழமை நள்ளிரவில் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் படுகாயமடைந்த அவா் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.