முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
கத்தியைக் காட்டி பணம் பறித்தவா் கைது
By DIN | Published On : 14th March 2021 11:46 PM | Last Updated : 14th March 2021 11:46 PM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், தோகைமலையில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தவா் கைது செய்யப்பட்டாா்.
தோகைமலை அடுத்த வேதாசலபுரத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ்(30). இவா் சனிக்கிழமை தோகைமலை வாரச்சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றாா்.
அப்போது, அங்கு அவரிடம் தங்கையாப்பட்டியைச் சோ்ந்த பழனிசாமி(55) கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1375-ஐ பறித்தாா்.
இதுகுறித்து மோகன்ராஜ் தோகைமலை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில் காவல்துறையினா் வழக்குப்பதிந்து பழனிசாமியைக் கைதுசெய்தனா்.