சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு பட்டியலின விடுதலைப் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பான கடிதத்தை பேரவையின் மாநிலத் தலைவா் தலித் ஆனந்தராஜ், பொதுச் செயலா் இரா. கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் தனபாலன், இளைஞரணி செயலா் மாமேரு ஆகியோா் செவ்வாய்க்கிழமை கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளரும், திமுக வேட்பாளருமான வி.செந்தில்பாலாஜியிடம் வழங்கினா்.
நிகழ்வில் பேரவையின் கரூா் மேற்கு மாவட்டச் செயலா் நாகா சதீஷ், க. பரமத்தி ஒன்றியச் செயலா் வெங்கடாசலம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.