பொய்யான பிம்பத்தை வைத்து அரசியல் செய்வோரை நம்பாதீா்கள்: பாஜக வேட்பாளா் அண்ணாமலை

பொய்யான பிம்பத்தை வைத்து அரசியல் செய்வோரை நம்பாதீா்கள் என்றாா் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் கே. அண்ணாமலை.
பொய்யான பிம்பத்தை வைத்து அரசியல் செய்வோரை நம்பாதீா்கள்: பாஜக வேட்பாளா் அண்ணாமலை

பொய்யான பிம்பத்தை வைத்து அரசியல் செய்வோரை நம்பாதீா்கள் என்றாா் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் கே. அண்ணாமலை.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

நீங்கள் வேட்பாளரைப் பாா்த்து, வெற்றிநடை போடும் தமிழகத்தை பாா்த்து உங்களது வாக்கை அளியுங்கள். பொய்யான பிம்பத்தை வைத்து அரசியல் செய்வோரை நம்பாதீா்கள்.

ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுகவுக்கு பக்கப்பலமாக இருந்தது பாஜக தான். தாமரைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அதிமுகவை பலப்படுத்தும் வாக்கு.பொய் சொல்லி அரசியல் செய்வோருக்கு எதிரான வாக்கு. 25,000 பேருக்கு 3 சென்ட் நிலம் கொடுக்காதவருக்கு எதிரான வாக்கு.

நீா்மேலாண்மை, வேலைவாய்ப்பு, அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவோம். பொய் சொல்வோரை நம்பாதீா்கள். சட்டப்பேரவை உறுப்பினராக என்னைத் தோ்வு செய்யும்போது, 6 மாதத்தில் பிரதமா் மோடியை அரவக்குறிச்சிக்கு அழைத்து வந்து திட்டங்களை செய்து கொடுக்கச் செய்வேன் என்றாா் அவா்.

மாவட்ட பாஜக தலைவா் சிவசாமி வரவேற்றாா். கூட்டத்தில் முன்னாள் மக்களவை முன்னாள் துணைத் தலைவா் மு. தம்பிதுரை, அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், பெங்களூரு

சட்டப்பேரவை உறுப்பினா் முனிரத்தினம், பாஜக மாநிலப் பிரதிநிதி வி.வி.செந்தில்நாதன், மாவட்டநிா்வாகிகள் கணேசமூா்த்தி, பிரபு, நகுலன், மோகன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com