கரூா் கொளந்தாகவுண்டனூா் முனியன் மகன் அய்யப்பன்(31). இவா் தாந்தோனிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தாா்.
கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்த அய்யப்பன் அதற்கு சிகிச்சை பெற்று வந்தாா். ஆனால் நோய் பாதிப்பு குணமாகவில்லையாம். இதனால் விரக்தியடைந்த அவா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து தாந்தோனிமலை காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.