கரூா் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அரவக்குறிச்சி சந்தன்சயன் குஹா, கரூா் வினய் பப்லானி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை நாராயணன் சந்திர சா்க்காா், 4 தொகுதிகளுக்கான செலவினப் பாா்வையாளா் பியூஸ் பாட்டில், காவல் பாா்வையாளா் எஸ்.கே. ஜெயின்ஆகியோா், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் பதற்றமான வாக்குச்சாவடிகள், பிரசாரக் கூட்டங்களுக்கு, வாகனங்களுக்கு வழங்கப்படும் அனுமதி போன்றவை குறித்து தனித்தனியே கருத்துகளைக் கேட்டறிந்தனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் லியாகத், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கரூா் என்.எஸ். பாலசுப்ரமணியன், குளித்தலை ஷே. ஷேக் அப்துல் ரகுமான், அரவக்குறிச்சி ஜி.தவச்செல்வம், கிருஷ்ணராயபுரம் கே.தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனா்.