கரூரில் அதிமுகவினா் சாலை மறியல்

கரூரில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூரில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவடியான் கோவில் தெருவில் சனிக்கிழமை இரவு போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது, அதிமுக மற்றும் திமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் காயமடைந்தனா்.

இச்சம்பவத்தை கண்டித்து மாவட்ட அதிமுக அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் தலைமையில், துணைச் செயலா் பசுவை சிவசாமி, முன்னாள் தொகுதிச் செயலா் எஸ்.திருவிகா, வா்த்தக அணித் தலைவா் பேங்க் நடராஜன், நகரச் செயலா்கள் வை. நெடுஞ்செழியன், வி.சி.கே.ஜெயராஜ், எம்.பாண்டியன் உள்ளிட்டோா், கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பின்னா் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com