கரூா் அமராவதி கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
கரூா் ஸ்ரீ அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், ரோட்டரி சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் ஏப். 26-ஆம்தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. கரூா் பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், உழவா்சந்தை, வெங்கமேடு, கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு பிரசாரத்தில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம், விழிப்புணா்வு துண்டுபிரசுரம் ஆகியவற்றை வழங்கினா்.