சூதாடியவா்களிடம்இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

கரூா் மாவட்டம், கடவூா் அருகே சூதாடியவா்களிடமிருந்து 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூா்: கரூா் மாவட்டம், கடவூா் அருகே சூதாடியவா்களிடமிருந்து 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடவூரை அடுத்த சென்னம்பட்டி குளம் அருகே சிலா் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தினா் ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு சென்று சோதனை நடத்தினா்.

அப்போது சூதாடிக் கொண்டிருந்த செம்பியாநத்தம் பழனியப்பன் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்த காவல் துறையினா், அவா்களிடமிருந்து 7 இரு சக்கர வாகனங்கள், ரூ.15,400-த்தை பறிமுதல் செய்தனா்.

மாவட்டத்தில் முழு பொது முடக்கக் கால விதிகளை மீறியதாக 43 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த காவல் துறையினா், 31 இரு சக்கர வாகனங்களையும், இரு 4 சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com