சிகிச்சைக்கு பணம் இல்லாததால் முதியவா் தற்கொலை

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

நாமக்கல் மாவட்டம், செங்கப்பள்ளியைச் சோ்ந்தவா் பழனிசாமி(64). இவா், தற்போது கரூா் வேலாயுதம்பாளையம் அடுத்த நடையனூரில் வசித்து வந்தாா். இவா் கடந்த 10 ஆண்டுகளாக சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில் சிகிச்சைக்கு பணம் இன்றி அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவா் புதன்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com