குடகனாற்றில் மணல் அள்ளியவா் கைது

கரூா் மாவட்டம், எருமப்பட்டி பகுதியிலுள்ள குடகனாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம், எருமப்பட்டி பகுதியிலுள்ள குடகனாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குடகனாற்றில் சனிக்கிழமை இரவு சிலா் டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக அரவக்குறிச்சி காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் துறையினா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, ஆற்றில் மணல் அள்ளிய டிராக்டா் ஓட்டுநரான ஆண்டிப்பட்டிக்கோட்டை வேலன் செட்டியூா் பிரபுவை(31) கைது செய்தனா்.

மேலும் மணல் எடுத்துச் செல்ல பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த காவல் துறையினா், அதன் உரிமையாளரான சிவாவைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com