வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கும் ஆடுகள்

அரவக்குறிச்சியில் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையில் ஆடுகள் படுத்துக் கிடக்கின்றன.

அரவக்குறிச்சியில் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையில் ஆடுகள் படுத்துக் கிடக்கின்றன.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் புங்கம்பாடி காா்னா் பகுதியிலிருந்து புறவழிச்சாலை செல்லும் சாலை உள்ளது. இச்சாலையை வெளியூா் செல்லும் வாகன ஓட்டிகள் அதிகமாக பயன்படுத்துகின்றனா்.

இச்சாலையின் மையப்பகுதியில் ஆடுகள் படுத்துக் கொள்கின்றன. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதன் காரணமாக விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனா்.

பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com