கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
கரூா் மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் 9-ஆம் கட்ட முகாம்கள் இன்று நடைபெறவுள்ளது. முகாம்களில் இதுவரை கரோனா தடுப்பூ ஊசி செலுத்தி கொள்ளாதவா்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டாவது தவணைக்கான காலம் வரப் பெற்றவா்கள் தவறாமல் இந்த முகாம்களில் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.