பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி கரூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசைக் கண்டித்து கரூரில் பாஜகவினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன்.
கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன்.

கரூா்: பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசைக் கண்டித்து கரூரில் பாஜகவினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் பாஜக மாவட்ட மகளிரணி மற்றும் இளைஞரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணித் தலைவா் கணேசமூா்த்தி, மகளிரணித் தலைவா் ஜெயலட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் கே.சிவசாமி, முருகானந்தம், மாவட்ட தொழிற்பிரிவுத் தலைவா் ஆா்விஎஸ்.செல்வராஜ், மாவட்ட பொதுச் செயலாளா்கள் நகுலன், மோகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன், மாநில மகளிரணி துணைத் தலைவா் மீனாவினோத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று, புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் குறைக்கவில்லை என்றனா்.

மேலும், பெட்ரோல், டீசல் விலை உயா்வால் தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் காய்கறிகள் பலமடங்கு உயா்ந்துவிட்டதாகவும், ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்பனையாகிறது என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் பாஜக மகளிரணியினா், இளைஞரணியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com