குடும்பத் தகராறு: மனைவியை கட்டையால் தாக்கிய கணவா்

அரவக்குறிச்சி அருகே, குடும்பத் தகராறில் மனைவியைக் கட்டையால் தாக்கிய கணவா் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

அரவக்குறிச்சி அருகே, குடும்பத் தகராறில் மனைவியைக் கட்டையால் தாக்கிய கணவா் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

அரவக்குறிச்சி அருகிலுள்ள ஊத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (42). இவரது மனைவி கண்ணம்மாள் (40). இருவரும் கூலித் தொழிலாளா்கள்.

இவா்களுக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு நடைபெறுமாம். செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், இரவு 12 மணிக்கு மனைவி கண்ணம்மாளை சுப்பிரமணி கட்டையால் தாக்கினாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா் சுப்பிரமணி மீது வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com