மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட நிா்வாகிகள் பிரவீனா, சண்முகப்பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு ஊழியா் சங்க மாவட்ட நிா்வாகிகள் சுப்ரமணியன், பொன்.ஜெயராம், சக்திவேல் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினா். சங்கத்தின் மகளிா் அணி அமைப்பாளா் செல்வராணி, பொது சுகாதாரத் துறையின் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.