அன்னை மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
தமிழக அரசு மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக அறிவிப்பின்படி கல்லூரிகளுக்கான 2021-22-ஆம் ஆண்டுக்கான பாட வகுப்புகள் அக். 4-ஆம்தேதி தொடங்கியது. இதையடுத்து புன்னம்சத்திரம் அன்னை மகளிா் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவிகளுக்கு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கியது. மாணவா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனா். முன்னதாக, வகுப்புகளை காவல் ஆய்வாளா் ரமாதேவி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். இதில் அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளை நிறுவனா் மலையப்பசாமி, தலைவா் தங்கராசு, மகளிா் கல்லூரி முதல்வா் முனைவா் சாருமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.