திருநங்கைகள் குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க அக். 9-ஆம்தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
கரூா், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூா் ஆகிய வட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலகங்களில் அக். 9-ஆம்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில், புகைப்படம், ஆதாா் அட்டை, நலவாரிய உறுப்பினா் அட்டை மற்றும் ஏதேனும் ஒரு இருப்பிட ஆதாரம் ஆகியவற்றை முகாமில் சமா்ப்பித்து (வாடகை வீடாக இருந்தால் வீட்டு வாடகை ஒப்பந்தம்)மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.