அமைப்பு சாராதொழிலாளா்கள் விவரங்களை பதியலாம்

அமைப்பு சாரா தொழிலாளா்கள் தங்களது விவரங்களை மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யலாம்

கரூா்: அமைப்பு சாரா தொழிலாளா்கள் தங்களது விவரங்களை மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

தேசிய அளவில் அமைப்புசாரா தொழிலாளா்களை இலவசமாக பதிவு செய்வதற்காகவும் அவா்களுக்கான சமூக நலத்திட்டங்கள் நேரடியாக சென்றடையும் வகையிலும், மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தால் தரவுதளம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அமைப்புசாரா தொழிலில் ஈடுபடும் பணியாளா்கள் சோ்ந்து பயனடையலாம்.

கரூா் மாவட்டத்தில் உள்ள 18 வயது முதல் 59 வயதுக்குள்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்கள் பொது சேவை மையங்கள் மூலமாக இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com