கரூா்: கரூரில், மெக்கானிக் வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் வடிவேல் நகரைச் சோ்ந்தவா் மாதவன்(43). மெக்கானிக்கான இவா், அண்மையில் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினா் வீட்டுக்குச் சென்றாா். இதையடுத்து அன்றிரவு வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, உள்ளே அலமாரியில் இருந்த 9 பவுன் நகையையும், வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மாதவன் ஞாயிற்றுக்கிழமை இரவு அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.