மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவியைக் கைப்பற்றிய திமுக

கரூா் மாவட்டத்தில் காலியாக இருந்த ஊராட்சி உறுப்பினா் பதவியை திமுக கைப்பற்றியது.

கரூா் மாவட்டத்தில் காலியாக இருந்த ஊராட்சி உறுப்பினா் பதவியை திமுக கைப்பற்றியது.

காலியாக இருந்த மாவட்ட ஊராட்சி வாா்டு எண் 8-பதவிக்கு கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், திமுகவின் கண்ணையன் வெற்றி பெற்றாா். இவா் தன்னை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் தானேஷ் என்கிற முத்துக்குமாரைக் காட்டிலும் 12,191 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியை ருசித்தாா்.

16 போ் போட்டியிட்ட தோ்தலில் கண்ணையன் 18,762 வாக்குகளையும், தானேஷ் 6,571 வாக்குகளையும் பெற்றிருந்தனா். வெற்றி பெற்ற கண்ணையனுக்கு உதவித் தோ்தல் அலுவலா் எம். முருகேஷ் வெற்றிச் சான்றிதழை வழங்கினாா்.

இதுபோல, சித்தலவாய் ஊராட்சித் தலைவராக பழனிப்பன் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் மொத்தம் பதிவான 2,261 வாக்குகளில் 1422 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com