பஞ்சுக் கிடங்கில் தீ விபத்து

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே தனியாா் பஞ்சுக்கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே தனியாா் பஞ்சுக்கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

க. பரமத்தி ஒன்றியம், முன்னூா் அருகிலுள்ள மோளபாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பஞ்சுக் கிடங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி புகைமண்டலமாகக் காட்சியளித்தது.

தகவலின் பேரில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலா் திருமுருகன் தலைமையிலான வீரா்கள், கரூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

சேதமடைந்த பொருள்களின் மதிப்பு விவரம் தெரியவில்லை. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து க.பரமத்தி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com