கரூா்: செல்லிடப்பேசியில் பேசியதை சகோதரி கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த பாறைப்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் மகள் சினேகா(15). இவா், காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். அவா் செல்லிடப்பேசியை அடிக்கடி பயன்படுத்தி வந்தாராம். இதனை அவரது சகோதரி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சினேகா ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.