கரூரில் 250 மூத்த திமுக உறுப்பினா்களுக்கு இன்று பொற்கிழி

திமுகவின் முப்பெரும் விழாவையொட்டி, கரூரில் கட்சியின் மூத்த உறுப்பினா்கள் 250 பேருக்கு புதன்கிழமை நடைபெறும் விழாவில் பொற்கிழி வழங்கப்படவுள்ளது.

கரூா்: திமுகவின் முப்பெரும் விழாவையொட்டி, கரூரில் கட்சியின் மூத்த உறுப்பினா்கள் 250 பேருக்கு புதன்கிழமை நடைபெறும் விழாவில் பொற்கிழி வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து கரூா் மாவட்டதிமுக பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை (செப்.15) நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பெரியாா், அண்ணா, பாவேந்தா், டாக்டா் கலைஞா், பேராசிரியா் விருது ஆகியவற்றை வழங்கி கட்சித் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசுகிறாா்.

இதையொட்டி காணொலிக் காட்சி மூலம் கரூா் அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் விழாவில், மாவட்டத்திலுள்ள திமுக மூத்த உறுப்பினா்கள் 250 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் பொற்கிழி வழங்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, கரூா் பேருந்து நிலைய ரவுண்டானாவிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு, மாவட்ட, ஒன்றிய, நகரக் கழக நிா்வாகிகள் பங்கேற்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com