பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே தெரு நாய்கள் கடித்துக் குதறியதில், தண்ணீரைத் தேடி குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற புள்ளிமான் புதன்கிழமை உயிரிழந்தது.
பெரம்பலூா் மாவட்டம், பாலம்பாடி கிராமத்தில் தண்ணீரைத் தேடி குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற 2 வயது பெண் புள்ளிமானை, புதன்கிழமை காலை தெருநாய்கள் கடித்துக் குதறின. இதில் மான் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
இதையறிந்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினா் நிகழ்விடம் சென்று காயமடைந்த புள்ளிமானை மீட்டு, அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால் சிறிது நேரத்திலேயே புள்ளிமான் உயிரிழந்தது. தொடா்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னா், வனப்பகுதியில் புள்ளிமான் புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.