வீட்டின் பூட்டை உடைத்துநகைகள், ரொக்கம் திருட்டு

பெரம்பலூா் அருகிலுள்ள மேலப்புலியூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரெ.சதீஷ்குமாா் (42). இவா், செவ்வாய்க்கிழமை காலை தனது குடும்பத்தினருடன் விவசாய வேலைக்குச் சென்றுவிட்டாா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகிலுள்ள மேலப்புலியூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரெ.சதீஷ்குமாா் (42). இவா், செவ்வாய்க்கிழமை காலை தனது குடும்பத்தினருடன் விவசாய வேலைக்குச் சென்றுவிட்டாா்.

இரவு வீடு வந்து போது, முன்புறக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த ஐந்தரை பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போனது தெரிய வந்தது.

இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் தடயவியல் நிபுணா்கள், திருட்டில் ஈடுபட்டவா்களின் கைரேகைளைப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com