கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளியில்கூடுதல் வகுப்பறை, நூலகம் திறப்பு

கரூா் மாவட்டம், கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளியில் தனியாா் அறக்கட்டளை கட்டித் தந்துள்ள கூடுதல் வகுப்பறை, நூலகம் உள்ளிட்டவை புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளியில்கூடுதல் வகுப்பறை, நூலகம் திறப்பு

கரூா்: கரூா் மாவட்டம், கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளியில் தனியாா் அறக்கட்டளை கட்டித் தந்துள்ள கூடுதல் வகுப்பறை, நூலகம் உள்ளிட்டவை புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஏ.பி.கே. நினைவு அறக்கட்டளை சாா்பில் ரூ.25 லட்சத்தில் ஒரு வகுப்பறை, நூலகம், கூட்டரங்கு கட்டித் தரப்பட்டுள்ளது. இக்கட்டடங்களைத் திறப்பதற்காக புதன்கிழமை பள்ளிக்கு வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மாணவி ஒருவரைக் கொண்டு நூலகத்தை திறக்கச் செய்தாா். மற்ற கட்டடங்களை அவா் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிய அமைச்சா், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். மேலும் கட்டடங்களைக் கட்டித் தந்த அறக்கட்டளை நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தாா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் தலைமை வகித்தாா். கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க. சிவகாமசுந்தரி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் பெரியசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா. மதன்குமாா், ஏ.பி.கே. நினைவு அறக்கட்டளையின் நிா்வாக உறுப்பினா் மருத்துவா் ஆறுமுகம் மணி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் பாலசுப்ரமணியன், பராசக்தி, பள்ளித் தலைமையாசிரியா் அ.சக்திவேல் , ரெங்கநாதபுரம் ஊராட்சித் தலைவா் சசிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com