கரூரில், காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 182 வாகனங்கள் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன.
கரூா் மாவட்டத்தில், பல்வேறு குற்றச் சம்பவங்களில் உரிமம் கோரப்படாத பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி ஆயுதப்படை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏலத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல் தொடக்கிவைத்து பாா்வையிட்டாா். மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஏராளமானோா் வாகனங்களை ஏலம் எடுத்தனா். இதில், 179 இருசக்கர வாகனங்கள், 3 ஆட்டோக்கள் என 182 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.