கரூா்: மாயனூா் கட்டளை மேட்டுவாய்க்காலில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், மணவாடியைச் சோ்ந்த குணசேகரன் மகன் ரவிக்குமாா்(27). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் மாயனூா் கட்டளை மேட்டுவாய்க்காலில் குளிக்கச் சென்றாா். அப்போது, ஆழமான பகுதியில் குளித்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட ரவிக்குமாா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.