கரூா் முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோயிலில் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை அலகு குத்தி வந்தும், காவடி எடுத்து வந்தும் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
கரூா் தாந்தோன்றிமலை முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோயில் பங்குனித் திருவிழா மாா்ச் 27-ஆம்தேதி அமராவதி ஆற்றில் இருந்து பக்தா்கள் கம்பம் பாலித்து வந்து கோயில் முன் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொருநாளும் அதிகாலையில் பக்தா்கள் கம்பத்துக்கு புனித நீா் ஊற்றி வருகிறாா்கள். தொடா்ந்து கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 1-ஆம்தேதி நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூக்குழி இறங்கும் விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
முன்னதாக திங்கள்கிழமை இரவு பூக்குழி திறப்பு நடைபெற்றது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் அமராவதி ஆற்றுக்குச் சென்று மாரியம்மன், பகவதியம்மன் சுவாமிகளுக்கு அக்னிச்சட்டி, அலகுகுத்தியும், சில பக்தா்கள் பறக்கும் காவடி எடுத்தும் வந்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். சிலா் கரும்புத்தொட்டிலில் குழந்தைகளை படுக்க வைத்து ஊா்வலமாக எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். மேலும் அக்கினிச்சட்டி மற்றும் தீா்த்தம் எடுத்தும், அலகு குத்தியும் வந்த பக்தா்கள் ஒவ்வொருவராக பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் நிறைவேற்றினா். தாந்தோன்றிமலை போலீஸாா் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.