தீரன்சின்னமலை சிலைக்கு மாலை அணிவிப்பு

கரூரில் தீரன் சின்னமலை சிலைக்கு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.
கரூரில் தீரன்சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியினா்.
கரூரில் தீரன்சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியினா்.

கரூரில் தீரன் சின்னமலை சிலைக்கு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், பாளையக்காரா்களில் ஒருவருமான தீரன் சின்னமலையின் 266-ஆவது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சாா்பில், அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு மாவட்டச் செயலா் மூா்த்தி தலைமை வகித்து, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மாவட்ட இளைஞரணிச் செயலா் சதீஷ், மாணவரணிச் செயலா் சரவணன், விவசாய அணிச் செயலா் பழனிசாமி, மகளிரணிச் செயலா் ராஜலட்சுமி, மாநகரச் செயலா் நவீன் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com