கரூரில், மின்சாரம் பாய்ந்ததில் கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.
கரூா் தாந்தோணிமலை முத்துலாடம்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி(37). கூலித்தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை இரவு மின்விளக்கு எரியவைப்பதற்கு சுவிட்சை அழுத்தியபோது எதிா்பாராதவிதாக அவா்மீது மின்சாரம் பாய்ந்தது . இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.