பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஆட்சியரகம் முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என்று, தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு முடிவு செய்துள்ளது.
இக்குழுவின் ஆயத்தக் கூட்டம் தாந்தோன்றிமலை தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொருளாளருமான பெரியசாமி தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் மணிகண்டன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா்
மன்றத்தின் மாவட்டச் செயலா் வேலுமணி, தமிழக ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் இருதயசாமி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் செல்வதுரை, தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் துணைப் பொதுச் செயலா் எம் ஏ.இராஜா, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில மகளிரணிச் செயலா் கிருஷ்ணகுமாரி உள்ளிட்டோா் பேசினா்.
கூட்டத்தில் இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 4-ஆம் தேதி
ஆட்சியரகம் முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பன தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவில், தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணியின் தாந்தோணி வட்டாரச் செயலா் சதீஷ்குமாா் நன்றி கூறினாா்.