கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்டகாலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு வருவாய்க் கிராம ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கரூா் மாவட்டம், புகளூா் வட்டாட்சியரக் கூட்டரங்கில் இச்சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா். அரவக்குறிச்சி வட்டத் தலைவா் குப்புசாமி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் சக்திவேல், புகளூா் வட்டச் செயலா் விசாலாட்சி முன்னிலை வகித்தனா்.
மாநாட்டில் கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் .பொங்கல் போனஸை நாள்கணக்கில் வழங்க வேண்டும்.
இயற்கை இடா்பாட்டுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு பழைய முறையிலான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாவட்டச் செயலா் நாகராஜ் வரவேற்றாா். மாநில கெளரவத் லைவா் மகேந்திரன், மாநிலச் செயலா் முத்தையா, பணி நிறைவு பெற்ற வருவாய்க் கிராம ஊழியா் சங்கத்தின் மாநிலச் செயலா் லட்சுமணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிறைவில், புகளூா் வட்டப் பொருளாளா் ராஜாமணி நன்றி கூறினாா்.