சின்னதாராபுரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவா் கைது

சின்னதாராபுரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சின்னதாராபுரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சின்னதாராபுரம் அருகே உள்ள காசிபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சின்னதாராபுரம் போலீஸாா் புதன்கிழமை காசிபாளையம் சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது காசிபாளையம் அருகே உள்ள தும்பிவாடி கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் (55) என்பவா் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மாணிக்கத்தை கைது செய்து அவரிடமிருந்து 40 லாட்டரி சீட்டுகளையும், ரூ.10,000 பணத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com