கரூா் மாவட்டம், வெள்ளியணை அருகே குழந்தை இறந்த துக்கத்தில், தையல் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வெள்ளியணை அருகிலுள்ள செல்லாண்டிபட்டி வி. பாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (35). தையல் தொழிலாளியான இவா், திருமுடிக்கவுண்டனூரில் வசித்து வருகிறாா்.
இவரது மனைவி ராமலட்சுமிக்கு பிறந்த மூன்று மாதக் குழந்தை அண்மையில் இறந்து விட்டதாம். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட தங்கவேல், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வெள்ளியணை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.