மாயனூா் அருகே மூதாட்டியிடம் ஐந்தேமுக்கால் பவுன் நகையைப் பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
மாயனூரை அடுத்த சித்தலவாய் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மாமியாா் செல்லம்மாள் (67). இவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டின் முன்பு சுத்தம் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், செல்லம்மாள் அணிந்திருந்த ஐந்தேமுக்கால் பவுன் நகையைப் பறித்து தப்பிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாயனூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.