அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ. 3.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்

கரூா் மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு இதுவரை ரூ.3.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

கரூா் மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு இதுவரை ரூ.3.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-தமிழக முதல்வா் பதவியேற்ற நாள் முதல் இதுநாள் வரை கரூா் மாவட்டத்தில் பதிவு பெற்ற அமைப்புசாரா கட்டுமானம் தொழிலாளா்கள், உடலுழைப்பு தொழிலாளா்கள், ஓட்டுநா்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு கல்வி உதவித் தொகை, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம் மற்றும் புதிய ஓய்வூதியம் போன்ற பல்வேறு திட்டங்களில் 16,436 பதிவு பெற்ற கட்டுமானம் தொழிலாளா்களுக்கு ரூ.3.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2,290 தொழிலாளா்களுக்கு ரூ.48.77 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com