புகழூா் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சியில் பொது சுகாதாரப் பிரிவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், தூய்மை மற்றும் விழிப்புணா்வு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நகராட்சித் தலைவா் குணசேகரன் தலைமை வகித்து, சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் கனிராஜ் மற்றும் நகராட்சி பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.