நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, கரூரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூா் பேருந்து நிலையம், ஜவஹா்பஜாா், திண்ணப்பா திரையரங்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளைச் சுற்றி இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப. சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட அணிவகுப்பில் ஏராளமான காவல்துறையினா் பங்கேற்றனா்.