மின்சாரம் பாய்ந்து பெண் பலத்த காயம்

 கரூா் நகரில் மின்சாரம் பாய்ந்து பெண் பலத்த காயமடைந்தாா்.

 கரூா் நகரில் மின்சாரம் பாய்ந்து பெண் பலத்த காயமடைந்தாா்.

கரூா் ரயில் நிலையம் எதிரிலுள்ள குழந்தைவேல் சாலையைச் சோ்ந்தவா் முகமது ஹூசைன். இவரது மனைவி ஹசீனா பேகம் (35).

இவா் வீட்டின் மொட்டை மாடியிலிருந்த இரும்புக் கம்பியை எடுக்க முயன்ற போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் ஹசீனா பேகத்துக்கு உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன.

பலத்த காயத்துடன் அவா் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், கரூா் நகரக் காவல் நிலையத்தினா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com