கரூரில் கஞ்சாவைத்திருந்த4 போ் கைது

கரூரில் கஞ்சா வைத்திருந்த மேற்கு வங்க மாநில தொழிலாளா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூரில் கஞ்சா வைத்திருந்த மேற்கு வங்க மாநில தொழிலாளா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் வெண்ணைமலை பகுதியில் புதன்கிழமை இரவு சிலா் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக வாங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு கஞ்சா வைத்திருந்த மேற்குவங்க மாநிலம் பா்வனேஸ் பகுதியைச் சோ்ந்த பஞ்சனன்(32), ஹரிதாஸ்(40), எதிரிஸ்கஜூ(26), கரூா் சணப்பிரட்சியைச் சோ்ந்த பிச்சைமுத்து மகன் மனோஜ்(19) ஆகியோரை கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com