அரவக்குறிச்சியில் திமுக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேரூா் கழக, மேற்கு ஒன்றியம் மற்றும் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். இதில், அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளிலும் கருணாநிதி பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட 5 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியச் செயலாளா் எம்.எஸ்.மணியன், கிழக்கு ஒன்றியச் செயலாளா் என்.மணிகண்டன், திமுக கிளைக் கழக பொறுப்பாளா்கள், வாா்டு பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.