கரூா் மாவட்டம் நொய்யல் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.
நொய்யல் அருகே உள்ள கந்தம்பாளையத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மனைவி அங்கயற்கன்னி (60). இவா், புதன்கிழமை வேலைக்கு செல்வதற்காக வேலாயுதம்பாளையம் சாலையில் நடந்து சென்றாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அங்கயற்கன்னி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அங்கயற்கன்னி திருச்சி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
கொலை வழக்கில் மூவா் கைது: சின்னதாராபுரம் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே மே 26 ஆம் தேதி அரவிந்தன் (28) என்ற இளைஞா் அடித்துத் கொல்லப்பட்டாா். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மணிகண்டன் (21), காா்த்திக் (20), அருண்குமாா் (20) ஆகியோா் புதன்கிழமை இரவு சின்னதாராபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
காப்பா் காயில் திருட்டு: பள்ளப்பட்டி துணை மின்நிலையத்திற்குள்பட்ட அரவக்குறிச்சியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் உள்ள மின்மாற்றியில் சுமாா் 152 கிலோ எடை கொண்ட காப்பா் காயிலை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக உதவி மின் பொறியாளா் சையது பஷீா் அப்பாஸ் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.