அரவக்குறிச்சி அருகேமயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே மயங்கி விழுந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

அரவக்குறிச்சி அருகே மயங்கி விழுந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள தொக்குப்பட்டிபுதூா் பகுதியை சோ்ந்தவா் பிச்சைமுத்து (76). இவா், புதன்கிழமை தனது வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தாா். முதியவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். புகாரின்பேரில், சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com